உடுமலை, ஜூலை 19 - தென்னை வளர்ச்சி வாரியம் விவசாயி களுக்கு வழங்கும் விண்ணப்பம் இந்தி மொழி யில் உள்ளதால் விவசாயிகளுக்கு தேவை யில்லாத குழப்பம் ஏற்படுகிறது. விவசாயிக ளுக்குப் புரியாத இந்தி மொழியில் விண்ணப் பம் வழங்குவதைக் கைவிட வேண்டும், தமிழ் மொழியில் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ் வந்த் கண்ணன் தலைமையில் அரசு கலைக் கல்லூரி கூட்ட அரங்கில் 19ஆம் தேதி வெள் ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட் டம் நடைபெற்றது. இதில் பேசிய விவசாயி கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பல் வேறு விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை முன் வைத்தனர்.
இதில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக் கள் தங்களின் குறைகளை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் எவ்வித நட வடிக்கையும் எடுப்பது இல்லை என்றும், பொது மக்கள் வருவாய்துறை அலுலகத்தில் கேட்டால் முறையான பதில் தராமல் அவர் களை அவமானப்படுத்தும் வகையில் நடத்து கொள்கிறார்கள். மேலும் குறைதீர் கூட்டத் தில் தரப்படும் மனுக்களுக்கு உரிய பதில் தரு வது இல்லை என்று வருவாய்த்துறை அதிகா ரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
பின்னர், இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தான பயன்படுத்தாத விவசாய நிலங்களை உடனடியாக குத்த கைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண் டும். மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகு திக்கு திருமூர்த்தி மலையில் இருந்து குரு மலைக்கு செல்லும் வகையில் பாதை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி வேலை தொடங்கியதை திட்டமிட்டு தடுத்த வனத் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைவாழ் மக்களின் நலன் கருதி விரை வில் பாதை அமைக்க வேண்டும்.
மேலும், தற்போது பருவமழை பெய்வ தால் வேளாண்துறையினர் விதை மற்றும் உரங்கள் தட்டுபாடு இல்லாமல் தர வேண்டும். போலியான விதை, உரம் விற்பணை செய்யா மல் இருக்கும் வகையில் தனியார் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் பட்டுக்கூடு உற்பத்தியில் சிறந்து விளக்கும் மாநிலமாக இருக்கும் தமிழ்நாட் டில் தரம் இல்லாத முட்டைகளை விற்பனை செய்வதாலும் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய மானியங்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் இருப்பதால் பாதிக்கப்படு வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத் தார்கள்.
வண்டல் மண் எடுக்க தமிழக அரசின் உத்தரவு இப்பகுதியில் முறையாக வருவாய்த்துறை நடைமுறைப்படுத்த வில்லை என்றும், விவசாய நிலங்களுக்கு அருகில் இருக்கும் குளங்களுக்கு அனுமதி தராமல் சில இடைதரகர்களின் நலனுக்கு ஒரே பகுதியில் மண் எடுக்க அனுமதி வழங்கி உள் ளதை மாற்ற வேண்டும் எனவும், மண் எடுக் கும் நடைமுறையை மாற்றி அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்படும் வகையில் மண் எடுக்கும் குளங்களின் எண்ணிக்கையை அதி கப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் உடுமலை வட்டாட்சி யர் சுந்தரம், மடத்துக்குளம் வட்டாட்சியர் பானுமதி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங்கம், சிஐ டியு பஞ்சாலை சங்கத்தின் செல்வராஜ் உள் ளிட்ட திரளான விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
யார் வசதிக்காக கூட்டம்?
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருக் கும் போது வெளிப்புற அரங்கில் கூட்டம் நடைபெற்றதால் மாணவர்களுக்கும் பாதிப்பு எற்பட்டது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பேசியது எதுவும் கேட்க வில்லை. ஏதோ கூட்டம் நடத்த வேண்டும் என்ற வழக்கமான நடமுறையை அமல்ப டுத்தி உள்ளார் வருவாய் கோட்டாட்சியர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் ஜஸ் வந்த் கண்ணன் அலுவலகமும், கூட்டம் நடைபெற்ற அரசு கல்லூரியும் ஒரே வளா கத்தில் இருப்பதால் அவரின் வசதிக்காக கூட்டத்தை இங்கு வைத்துள்ளார் போல என விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.