உடுமலை, டிச.6- மடத்துக்குளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நெற் பயிர்கள் கருகி உள்ளதை ஆய்வு செய்து உரிய நிவாரணம் தர வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் வெள்ளியன்று மடத்துக்கு ளம் வேளாண்மை துறை அலுவல கத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் செய்தனர்
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகாச் செயலா ளர் எம்.எம்.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இப் பகுதியில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நெற்ப யிர்கள் கருகி உள்ளன. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத் தில் தெரிவித்தும், எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். உடன டியாக பாதிக்கப்பட்ட விவசாயிக ளின் விளை நிலங்களை வேளாண் மைத்துறை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகள் பயன்படுத்திய உரம் மற்றும் பூச்சி மருந்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண் டும் என வலியுறுத்தபட்டது. மேலும் இக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று திங்கட்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை பாதிக்கபட்ட விவசாயி களுடன் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தப்போவதாவும் தெரிவித் தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பாலதண்டபாணி கண்டன உரையாற்றினார். தமிழ் நாடு தென்னை விவசாயிகள் சங்கத் தின் நிர்வாகிகள் தயானத்தன், போஸ் உட்பட திரளான விவசாயி கள் கலந்து கொண்டனர்.