உடுமலை, ஜூலை 4 – உடுமலை ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட தேவனூர் புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாத காலமாக ஆசிரியர்கள் இல்லா மல், மாணவிகள் பாடம் படிக்க முடி யாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் தேவனுர்புதூரில் நாச்சி முத்து கவுண்டர் பழனியம்மாள் அர சினர் மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரே மகளிர் மேல்நிலைப்பள்ளியாக இது உள் ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண விகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பேருந்து வசதிகள் மற்றும் அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. கடந்த கல்வியாண்டில் இருந்து முதல் குரூப் பாடப்பிரிவுகள் உட்பட மேல்நிலைப் பாடப்பிரிவுகள் துவக் கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு துவங்கி ஒரு மாதத்தை கடந்தும் இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை.
எனவே அடிப்படை பாடம் நடத்தப்படாமல் மாணவிகள் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகி வருன் ன்றனர். 11 மற்றும் 12ஆம் வகுப்பில் அறி வியல் பாடப்பிரிவில் கணிதம், வேதி யியல், தாவரவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலை உள்ளது. இது சம்பந்தமாக தலைமை ஆசிரியரிடம் முறையிட் டும் எந்த பலனும் இல்லை. மாவட்ட கல்வி அதிகாரிகளும் உரிய பதில ளிக்கவில்லை. 11, 12ஆம் வகுப்பில் 80க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு சுமார் 20 மாணவிகள் அறிவியல் பாடப்பிரி வில் பயில்கின்றனர். இவர்கள் அனைவரும் 10ஆம் வகுப்பில் 450 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகியும் பாடங்கள் துவக்கப்படா ததால் மாணவிகளின் கல்வி, எதிர் காலம் பாதிக்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் இந்த நிலையால் மாணவி கள் மிகவும் மனஉளைச்சல் அடைந் துள்ளனர். எனவே உடனடியாக சம் பந்தப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு ஆசி ரியர்களை நியமித்து பாடம் நடத்து வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண் டும் என மாணவிகள் எதிர்பார்க்கின்ற னர்.
கிராமப்புற பள்ளி என்பதால் இந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியி டங்கள் காலியாக விடப்படுகிற தோ? அரசு பள்ளி புறக்கணிக்கப்படு கிறதோ? தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை தள்ளுவ தற்கான ஏற்பாடாக இது இருக்கி றதா? என சந்தேகம் எழுவதாக இந் திய மாணவர் சங்கத்தினர் கூறினர். எனவே தமிழக அரசு இப்பள்ளி யில் உரிய ஆய்வு செய்து, உடனடி யாக போதுமான தகுதியான ஆசிரி யர்களை பணியில் அமர்த்தி பாடங் கள் சிறப்பாக நடைபெறுவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந் திய மாணவர் சங்கத்தினர் வலியு றுத்தி உள்ளனர். ஆசிரியர்கள் நியமிக்க உடனடி யாக ஏற்பாடு செய்யாவிட்டால் பெற் றோர், மாணவிகளுடன் சேர்ந்து அடுத்தக்கட்டமாகப் போராட்டம் நடத்த திட்டமிடுவோம் என்று இந்திய மாணவர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கூறியுள்ளனர்.