districts

img

ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட நினைவுக் கல்வெட்டை ஆவணப்படுத்த கோரிக்கை

உடுமலை, டிச.5- தளி பேரூராட்சிப் பகுதியில் எத்தலப் பர், ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட நினைவுக் கல்வெட்டை ஆவணப்ப டுத்த வேண்டும் என்று உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தினர் கோரியுள்ள னர். உடுமலை அருகே தளி பாளையப் பட்டு மலையாண்டி வெங்கிடுபதி எத்த லப்பருக்கு தமிழக அரசால் ரூ.2  கோடியே 62 லட்சத்தில் திருமூர்த்திம லையில் அரங்கமும், உடுமலை நக ராட்சி வளாகத்தில் தளி எத்தலப்பரின் உருவச் சிலையும் வைக்கப்பட்டு உள் ளது.

ஆனால் தளி பாளையப்பட்டு மலை யாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் வீரத் துக்குச் சான்றாக விளங்கும் அந்திரை கேதீசு எனும் ஆங்கிலேயரைத் தூக்கி லிட்ட நினைவுக் கல்வெட்டு தளி பேரூ ராட்சி பகுதியில் சான்றாக அப்படியே இருக்கிறது. இதைத் தமிழ்நாடு அரசிற்கும், தொல்லியல் துறைக்கும் ஆவணப்ப டுத்த உரிய சான்றுகளுடன் விண்ணப் பங்கள் அனுப்பப்பட்டது.

அந்திரை கேதிசு இருக்கும் கல்லறைக்கு உண் டான அரசு சான்றிதழ்களும் சமர்ப்பிக் கப்பட்டன. தமிழ்நாடு அரசு தொல்லி யல் துறையின் சார்பிலும், செய்தித் துறை சார்பிலும் பல முறை வந்து ஆய்வு  செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.  

தொல்லி யல் துறையின் மண்டல அலுவலர் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் நேரில் வந்து பார்த்து ஆய்வு  செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகள் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தளி பாளையப்பட்டு மலை யாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நினைவு அரங்கத்திற்கும், சிலைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு ஆங்கிலே யரைத் தமிழ் மன்னன் தூக்கிலிட்டான் என்ற வீரத்தைப் பறை சாற்றும் வகை யில் இந்தக் கல்வெட்டு உள்ள கம்பிவே லிகள் அமைக்கப்பட்ட இந்த இடத் தினை பாதுகாத்து அடுத்த தலைமு றைக்குத் தெரியப்படுத்தும் வகையில்  ஆவண செய்ய வேண்டும் என   உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தி னர் கோரியுள்ளனர்.