districts

img

அமராவதி அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்வு

உடுமலை, ஜூலை 17- அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை யின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் 15 அடி உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணை அமைந்துள்ளது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார்  55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிரா மங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து  வருகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பரு வமழையின் போது அமராவதி அணைக்கு  நீர்வரத்து அதிகரிக்கும். இதையடுத்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 ஆம்  தேதியும், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூலை 1ஆம் தேதியும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும், அணைக்கு நீர்வ ரத்து குறைவாக இருந்தது. மேலும், அணை யின் நீர்மட்டமும் 50 அடியாக இருந்து வந்தது.  இந்நிலையில் தமிழக கேரளா எல்லையில் உள்ள அமராவதி அணையில் நீர் படிப்பு பகு திகளான மறையூர், கோவில் கடவு, காந்த ளூர் மற்றும் மூணார் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகி றது. இதனால் தேனாறு, பாலாறு, சின்னாறு  ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித் தது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 63 அடியாக இருந்த அணையின் நீர்மட் டம் தற்போது 78.25 அடியாக உயர்ந்து உள் ளது. மேலும், அணைக்கு 5,184 கன அடி நீர்வ ரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் வேக மாக உயர்ந்து வருவதால் பாசன விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.