ஈரோடு, ஆக.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு சார்பில் வயநாடு பேரிடர் நிதியாக ரூ.1.50 லட்சம் அளிக்கப் பட்டது.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமி ழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் எழுச்சிகரமான மறியல் தமிழ கம் முழுவதும் வியாழனன்று நடை பெற்றது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட் டத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத் தில் பங்கேற்றவர்கள் கைதாகி, தனி யார் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். மண்டபத்தில் இடதுசாரி கட்சி களின் தலைவர்கள் மறியல் போராட்டத் தின் அவசியம் குறித்து உரை யாற்றினர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துகண்ணன் உரை யாற்றுகையில், “கடும் புயல், மழை வெள்ளத்தால், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரள மாநி லம் வயநாடு மக்களுக்கு துணை நிற்போம். நிதி தாரீர்” என அறை கூவல் விடுத்தார்.
இதனை ஏற்று அங்கிருந்த கட்சி, வர்க்க வெகுஜன அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தானாக முன்வந்து உடனே ரூ.50 ஆயிரம் நிதி அளித்த னர். அத்துடன் ரூ.1.50 லட்சம் கொடுப்ப தாக பங்கேற்றவர்கள் உறுதியளித்த னர். பெறப்பட்ட நிதி உடனடியாக கேரள முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாக மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன் தெரிவித்தார்.
நிதி கொடுத்த, கொடுப்பதாக ஒப்புக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.
கோவை
இதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சிறப்பு பேரவையில் வசூலான, வயநாடு பேரிடர் பாதிப்புக்கான முதற்கட்ட நிவாரண நிதி ஒரு லட்சம் ரூபாய் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.
இதனை கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யூ. கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜா, மூர்த்தி ஆகியோர் வழங்கினர்.