ஈரோடு, ஜூலை 28- மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூலை 28 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை யால் கர்நாடக மாநிலம் குடகு, கேரள கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பின.அணைகளின் பாதுகாப்பு கருதி அணை களுக்கு வரும் உபரிநீர் திறந்துவிடப்பட்டு, தமிழகத்து க்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 65ஆயி ரத்து 867 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கி றது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.20 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 47 ஆயி ரத்து 896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினா டிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குறுவைப் பயிர் சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் ஞாயிற்றுக்கிழ மை முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து காணொலிக்காட்சி வாயி லாக டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.
அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதி களில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார். கடைமடை பகுதி வரை நீர் ஆதாரங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை பொதுப் பணிதுறை, நீர்வளத்துறை சார்பாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிலை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் குறுவை பயிர் சாகுபடி, ஆடிப்பெருக்கு விழா வை கொண்டாட ஜூலை 28 ஞாயிறன்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.