ஈரோடு, மே 15- சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காண வலியுறுத்தி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியரிடம் வெள்ளியன்று சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங் கத்தினர் மனு கொடுத்தனர். ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அலுவலகங்களில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி ஒப்பந்தம் முடிவடைந்து மூன்றாண்டு களாகிறது. ஒப்பந்தம் முடிந்தவுடன் சிஐடியு சங்கம் கூலி உயர்வு கோரிக் கையை வைத்தது. இதன்மீது வரு வாய் கோட்டாட்சியர் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடைபெற்ற பிற கும், கூலி உயர்வு வழங்கப்பட வில்லை. இதனால், கூலி உயர்வு கோரிக்கையை பேசி தீர்க்க முன் வர வேண்டுமென சிஐடியு சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால், கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோ சியேசன் தரப்பினர் பேச்சுவார்த் தைக்கு வர மறுக்கின்றனர். இந்நிலை யில் கிருஷ்ண தியேட்டர் அருகிலி ருந்து சுமைப்பணியாளர் சங்க தலை வர் டி.தங்கவேலு தலைமையில் ஊர்வ லமாக வந்த சுமைப்பணியாளர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். இதில், சுமார் 60 ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி உயர்வு கோரிக்கைக்கு பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட்டு தீர்வு கண்டு வருகிறோம். இந்நடைமுறையை சீர்குலைத்து, தொழிலாளர்களை நவீன கொத்த டிமைகளாக்க கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் நினைக்கிறது. இத னால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற் பட்டு, தொழிலுறவும், சமூக அமை தியும் சீர்குலையும் நிலை ஏற்ப டும் வாய்ப்புள்ளது. எனவே, தொழிலா ளர்களை மிரட்டி பணிய வைக்கும் நிர் வாகத்தின் முடிவைக் கைவிட்டு பேச்சு வார்த்தை மூலம் கூலி உயர்வு கோரிக் கையை சுமூகமாகப் பேசி, தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் கூறி யுள்ளனர். இந்நிகழ்வில், அனைத்து வகை தொழிலாளர் ஐக்கிய தொழிற் சங்க பொது செயலாளர் ப.மாரி முத்து, ரயில்வே கூட்ஸ்செட் பாரம் தூக்கும் தொழிலாளர் சங்க தலை வர் எம்.பழனிசாமி, செயலாளர் எஸ். மாரிமுத்து, சிஐடியு சுமைப்பணியாளர் சங்க பொது செயலாளர் எம்.அர்த்த நாரி மற்றும் பொருளாளர் ஆர்.ரங்க நாதன் உள்ளிட்ட திரளான சுமைப் பணி தொழிலாளர்கள் கலந்து கொண் டனர்.