ஈரோடு, ஜுன் 12- பெருந்துறையில் அமைந்துள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத் தப்பட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்து சாமி தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணி கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் நடை பெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும், இப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் துரிதப்படுத் துவது, புதிய திட்டப்பணிகளை தொடங்கு வது குறித்தும், தொடர்புடைய துறை அலுவ லர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சோலார் பகு தியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் காய்கறி மளிகை சந்தை வளாகம், வஉசி பூங்கா ரூ.15 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல் மற்றும் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்ப டுத்துதல், ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட 9 புதிய திட் டங்களை அறிவித்தார்கள். இப்பணிகளை விரைவில் துவங்கி, முடிப்பதற்கு நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாவீரன் பொல்லான் நினை விடம், தொழிற்பூங்கா உள்ளிட்ட அனைத்தை யும் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் நட வடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை விரைந்து முடித்திடவும், மேலும் காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கும் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள் ளது என தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சர் அந்தியூர் வட்டம், அத்தாணி ஓடைமேடு ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளி சத்துணவு அமைப்பாளருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா ளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வரு வாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சி யர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.