districts

லாட்டரி விற்ற நபர் கைது

ஈரோடு, ஜூலை 28-

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் நேருஜி வீதியை சேர்ந்தவர் வினோத்குமார்(27) இவர் கருங்கல்பாளையம் கல்லு பிள்ளையார் கோவில் வீதி அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த காமாட்சி யம்மன் கோவில் வீதியை சேர்ந்த சிவா என்ற சிவ குமார் (37) என்பவர் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டினை ஏமாற்றி  விற்பனை செய்ததாக வினோத்குமார் கருங்கல்பா ளையம் போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில், காவல் துறையினர் சிவகுமாரை கைது செய்தனர்.

;