districts

img

சீரமைக்கப்படாத சாலையால் மலைவாழ் மக்கள் அவதி

ஈரோடு, ஜூன் 7- பர்கூர் தாமரைக்கரை பகுதியில்  கடந்த 6 மாதங்களாக பழுதடைந்து காணப்படும் சாலைகள் சீரமைக்கப் படாமல் உள்ளன. இதனால் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக் குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை, பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின்போது, பர் கூர் ஊராட்சி தாமரைக்கரையில் பழங் குடியினர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 9 வீடுகள் தலா ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் பர்கூர் மலையில் தாமரைக்கரையிலிருந்து மடம் வரை ரோடு வேலை கடந்த 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினரும், சாலையைப் பயன்படுத்துவோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலை வர் எஸ்.வி.மாரிமுத்து கூறுகையில், பழுதடைந்த சாலையை சீரமைப் பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு இடித்துப் போட்டது அப்படியே தான் கிடக்கிறது. சாலையின் ஓரமாக புதுப் பிக்கப்பட்டது வழுக்கும் நிலையில் உள் ளது. இதனால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளிலிருந்து பாது காக்கும் வகையில் விரைந்து சாலை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.