தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் டிச.16,17 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் எம். வெங்கடேசன் உள்ளிட்ட மாநில நிர்வாகி களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரை யாற்றினார். இக்கூட்டத்தில் மின்வாரிய த்தை பொதுத்துறையாகப் பாதுகாக்க வேண்டும். மின்வாரியத்தை சீரழிக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இ-டெண்டர் மற்றும் அவுட்சோர்சிங் முறையைத் தடுக்க வேண்டும். துணை மின் நிலையங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை தடுக்க வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களின் பணி நிரந்தரத்திற்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஜனவரி முதல் வாரத்தில் கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலந்தழுவிய போரா ட்டம் நடத்துவது; காலிப்பணியிடங்களை நிரப்பாதது, ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஆகி யவற்றை கண்டித்து ஜனவரி இறுதியில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என அறைகூவல் விடப்பட்டது.