ஈரோடு, செப்.1- பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடி யாக அமல்படுத்த வேண்டுமென வலி யுறுத்தி, ஆசிரியர் தினமான செப்.5 ஆம் தேதி யன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிறன்று ஈரோடு, செங்குந்தர் பள்ளியில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் சே.பிரபாகரன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டத் தலைவர் க.சுதாகுமார் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், ஒன்றிய அரசின் பென்சன் திட்ட அறிவிப்பு மோசடியான தாகும். ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதிய திட்டமே. புதிய பென்சன் திட்டத்தின் உயர் வடிவமே ஓருங்கிணைந்த பென்சன் திட்டமாகும். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆசிரியர், அரசு ஊழியர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட பணமானது எந்தத் திட்டத்திலும் சேர்க்காமல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியபடி அமல்படுத்தாமல் அரசு மௌனம் காக்கிறது.
எனவே, ஆசிரியர் தினமான வரும் செப்.5 ஆம் தேதியன்று அடிப்படை வாழ்வாதார மான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தி மாவட்ட தலைநகரங் களில் அன்றைய தினம் (செப்.5) ஒற்றைக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப் படுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத் தும் வரை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தனித்தும், தான் அங்கம் வகிக்கும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு மற்றும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப் பிலும் இணைந்து தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாநில பொதுச்செயலாளர் பொ.அன் பழகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் இறுதியில் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆ.இளங் கோவன் நன்றி கூறினார்.