districts

img

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு சத்தி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு சத்தி பேருந்து நிலையம் முன்பு திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் நிர்வாகிகள், கே.எம்.விஜயகுமார், பி.வாசுதேவன், கே.மாரப்பன், மூத்த தலைவர்  கே.ஆர்.திருத்தணிகாசலம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று அந்தியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராகவன் மற்றும் கந்தசாமி, எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.