districts

img

கோவில்களின் பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஈரோடு, ஜூன் 13-  தமிழக கோவில்களின் பழமை மாறா மல் புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திங்களன்று ஈரோட்டில் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சத்தீஸ்வரர் கோவில், செல் லாண்டியம்மன் கோவில், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்களில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் கூறியதாவது, தமிழக முதல்வர்  வழிகாட்டுதலின்படி, தமிழ கத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில், அமைச்சர் பெருமக்கள் துறை சார்ந்த மக்கள் நல திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகை யில் திங்களன்று ஈரோடு மாநகர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் உப கோவில் களில்களான மொடக்குறிச்சி வட்டம், கஸ்பாபேட்டை சத்தீஸ்வரர் கோவில், ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சத்தீஸ்வ ரர் கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமை யான கோவில் ஆகும். இக்கோவில் மிக வும் பழுதடைந்திருந்த நிலையில் தற் போது திருப்பணிகள் செய்திடும் வகை யில் பாலாலயம் செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அனு மதி பெற்று மேற்கண்ட கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து விரைவில் குடமு ழுக்கு நடத்தவும், பூஜைகள் மற்ற விழாக்கள் நடைபெறவும், கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை உடனடியாக மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்கிடவும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங் கப்பட்டுள்ளது என்றார்.  இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி, ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் அன்னக் கொடி, இந்து சமய அறநிலை துறை உதவி கோட்ட பொறியாளர் காணீஸ்வரி, தொல் பொருள் துறை உதவி இயக்குநர் (ஓய்வு) சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை வட்டாட்சியர் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்முரு கன், சுகுமார் உள்பட இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.