கோபி, நவ.26- கூகலூரில் ரூ.2கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்க டாசலம் செவ்வாயன்று தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கூகலூர் - பெருந்தலையூர் செல்லும் சாலை குறுகிய சாலை இருந்து வந்தது. இச்சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்ப டுவதை தடுக்கவும் விபத்துக்களை தவிர்க்கவும் சாலையை விரிவுபடுத்தி புதிதாக தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டி கூகலூர் பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர் இந்நிலையில் கூகலூர் பொது மக்களின் கோரிக்கை ஏற்ற அரசு ஒருங்கிணைந்த சாலை உட் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2கோடி மதிப்பீட்டில் கூக லூர் முதல் பெருந்தலையூர் செல்லும் சாலையை விரிவு படுத்தி புதிதாக தார்சாலை அமைக்கும் பணியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூகலூர் பேரூர் கழக செயலாளர் ராஜாராம், பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெய லட்சுமி மாரப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பா ளர் வினோத்குமார், அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, டி.ஏ. பழனிசாமி மற்றும் உதவி கோட்டப் பொறியாளர் மோகன் ராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.