districts

img

வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு: சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம்,பிப்.14- சாலையோர வியாபாரிகள் 2014 பாதுகாப்புச் சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டா யமாக அப்புறப்படுத்தும் போக்கினை  கை விட வேண்டும்.  இதுதொடர்பாக காவல்துறைக்கு பயிற்சி அளித்திட வேண்டும். சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெ டுத்து அடையாள அட்டை வழங்க வேண்  டும். வெண் டிங் தேர்தலை ஜனநாயக பூர்வ மாக அனைவரும் பங்கேற்கும் விதத்தில் நடத்த வேண்டும். சாலையோர வியாபாரி கள் கந்துவட்டி கொடுமையில் இருந்து விடு படும் விதத்தில் கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 15 ஆயிரம் கடன் தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி  வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங் கத்தின் சார்பாக ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் என்.பி.செந்தில் தலைமை வகித்தார்.  சாலையோர வியாபாரிகள் சங்க தலை வர் ஆர்.டி.செல்வம் முன்னிலை வகித்தார்.  சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முத்து விஜயன் ,மாவட்ட துணைத் தலைவர் டி.இராமச்சந்திர பாபு  மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ஞான சேகர்,  ஜி.சந்தியா  ஆகியோர் பேசினர்.  முன்னதாக இது தொடர்பான கோரிக்கை மனுவை நகராட்சி நிர்வாகத்திடம் சிஐ டியு தலைவர்கள் அளித்தனர்.  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதியில் பேரூராட்சி நிர்வாகத்திடம் சிஐ டியு மாவட்ட பொருளாளர் ஆர்.முத்து விஜயன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராமு, அண்ணாத்  துரை, ஆலடீஸ்வரன் ஆகியோர் மனு கொடுத்தனர்.  இதில் திரளானோர் பங்கேற்றனர்.