districts

img

இராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா துவங்கியது 114 அரங்குகளில் 2 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன

இராமநாதபுரம், பிப்.9- இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் இராஜா மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதா னத்தில் 5 ஆவது புத்தகத் திருவிழா  பிப்ரவரி 9 வியாழனன்று துவங்கி யது.  இராமநாதபுரம் மாவட்ட நிர்வா கம் மற்றும் கலை இலக்கிய ஆர்வ லர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழாவின் துவக்க நாள்  நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலை வர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை  வகித்து புத்தகக் கண்காட்சியை அரங்கை திறந்து வைத்தார். இராம நாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்  காதர்பாட்சா முத்துராமலிங்கம், பர மக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர்- கிராமத்தொழில்கள் வாரி யத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றி னார்.  பிப்ரவரி 9 ஆம் தேதி முதல்  19 ஆம் தேதி வரை நடைபெறுகின்ற  இந்த புத்தகத் திருவிழாவில் 114  அரங்குகள் அமைத்து ஆயிரத்திற் கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழு திய 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்த கங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகத்திருவிழாவினை முன்  னிட்டு நடைபெற்ற சிறந்த வாச கர்கள் போட்டியில் தேர்வுசெய்யப்  பட்ட மேனகா என்பவருக்கு பாராட்டு சான்று மற்றும் ரூ.2 ஆயிரத்திற்கான ரொக்கப்பரிசுகளை ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட  வருவாய் அலுவலர் ஆ.ம. காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, இராம நாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், நகர்மன்ற துணைத் தலைவர் பிரவின் தங்  கம், கலை இலக்கிய ஆர்வலர்  சங்கத்தின் தலைவர் மரு.அ.சின்  னத்துரை அப்துல்லா, துணைத் தலைவர் மரு.இரா.ஆ.வான்தமிழ் இளம்பரிதி மற்றும் பள்ளி மாணவ,  மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் முத்தான திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட  ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலை மையில் இராமநாதபுரம் சட்டப்  பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத் தார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.