இராமநாதபுரம், பிப்.13- இராமநாதபுரம் மாவட் டம் மண்டபம் பேரூராட் சிக்குட்பட்ட தோப்புக்காடு கிராமத்தில் செயல்பட்டு வந்த கபானா கோரல் ரீப் தனியார் உல்லாச கேளிக்கை விடுதி 2021-ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகம் பகுதி மக் களின் எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல் அனுமதி வழங்க முயற்சிப்பதைக் கண்டித் தும், உல்லாச விடுதியை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் ரிசார்ட் நிர்வா கத்திற்குச் சாதகமாக உண் மைக்குப் புறம்பான அறிக்கை தாக்கல் செய்த கிராம நிர் வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரி கள், வரி வசூல் நடவடிக்கை களை மேற்கொண்ட பேரூ ராட்சி நிர்வாகம் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி கடல் தொழிலாளர் (சிஐடியு) சங்கம்-தோப்புக்காடு கிராம மக்கள் இணைந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு திங்களன்று காத்தி ருப்புப் போராட்டம் நடத்தி னர். வலியுறுத்தி கடல் தொழி லாளர் (சிஐடியு) சங்க மாவட்டச் செயலாளர் என். கருணாமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற போராட் டத்தில் தோப்புக்காடு கிரா மத்தலைவர் பால்ச்சாமி, தோனிதுறை ரூபன், பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் சித்ராதேவி, மனோகரி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, என்.பி செந் தில், அருள்ராஜ், கல்யாண சுந்தரம். முத்துப்பாண்டி, மண்டபம் எஸ். கருப்பையா சீனிவாசன் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இராம நாதபுரம் மாவட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் படும் என்றனர்.