இராஜபாளையம்,மார்ச் 22- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொள்ள விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யத்தில் இருந்து 22 மாற்றுத்திறனாளிகள் திங்கட் கிழமையன்று மாலை ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களை ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்திற்கு செல்லவிடாமல் தடுத்த இராஜபாளையம் காவல்துறையினரைக் கண்டித்து செவ்வாயன்று ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சங்கத்தின் நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலை வர் சுப்பிரமணி , பொருளாளர் வீரமணி, பாக்ய ராஜ், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.