அரியலூர், டிச.12- கேபிள் டி.வி. ஆப்ரேட் டர்களுக்கு நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரி யலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதியிடம், தமி ழக கேபிள் டி.வி ஆப்ரேட்டர் கள் பொது நலச் சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘காவல் துறையினர், வருவாய்த் துறையினரை பயன்படுத்தி கேபிள் டி.வி ஆப்ரேட்டர் களை குற்றவாளியைப் போல் சித்திரிப்பதை கை விட வேண்டும். இலவச செட் டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கிவிட்டு, தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரையத்தொகை என்று சொல்லி பெருந்தொகையை கேபிள் ஆப்ரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கேபிள் டி.வி ஆப்ரேட்டர்களின் நலன் கருதி நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள் ளன. சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஜி. கந்தன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ரமேஷ் குமார், மாவட்டச் செயலா ளர் ஜெய்குமார், மாவட்டப் பொருளாளர் பன்னீர் செல் வம் உள்ளிட்டோர் மனுவை அளித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக கேபிள் டிவி ஆப் ரேட்டர்கள் பொது நலச்சங் கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் சைவ.குமணன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் முருகு.இளஞ்செழி யன், மாவட்டப் பொருளா ளர் எம்.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுக புத்ராவிடம் வழங்கினர்.