அரியலூர், நவ.6 - ‘இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை, திணிப்பு என்பது வேண்டாம் என்பதே எங்கள் கொள்கை’ என பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரி வித்தார். அரியலூர் அண்ணா சிலை அருகே திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சனிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சிவ.மாணிக்கம் தலைமை வகித்தார். சட்ட, திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திர சேகர், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அ.பெருநற்கிள்ளி உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உரையாற்றி னர். தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசு கையில், “தமிழ் மொழியின் படைப்புகளை பல்வேறு நாடுகளில் மொழிபெயர்த்து வெளி யிட்டு வரும் அறிஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மறைந்த மொழிப்போர் தியாகி கீழப்பழு வூர் சின்னச்சாமி, தமிழுக்காக தன்னுயிரை ஈந்தவர். வங்கி, தபால் நிலையங்களில் வடமாநிலத் தவரே (இந்திகாரர்களே) பெரும்பாலும் பணி யில் உள்ளனர். அங்கு தமிழர் செல்லும் போது எதுவும் புரியாமல் தவிக்கின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் என்பது தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கமாகும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்பதே எங்கள் கொள்கை. பிரதமரை சந்தித்த போது தமிழக முதல்வர் முதல் கோரிக்கையாக வைத்தது நீட் வேண் டாம் என்பதுதான். இருமொழி கொள்கையை வரவேற்போம். இந்தி திணிப்பு என்று வந்தால், திமுக எதிர்த்து நிற்கும்” என்றார்.