districts

img

மாநில அளவிலான கபடி  போட்டிக்கு நடுவர் தேர்வு

அரியலூர், அக்.13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் மாநில அளவிலான கபடி போட்டிக்கான நடுவர் தேர்வு நடைபெற்றது.  தேர்வை கல்லூரி தாளாளர் ரகுநாதன் துவக்கி வைத்  தார். அகில இந்திய கபடி நடுவரும், தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக கன்வினருமான கோபாலன் செயல்பயிற்சி, எழுத்துத் தேர்வு வகுப்புகளை நடத்தினார். தமிழக அள விலான அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 400-க்  கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.