அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி மின் மோட்டார் இயக்கும் பணியாளர்கள் உட்பட 13 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் வரவேற்றார்.