districts

தனியார் பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி: 38 பேர் காயம்

அரியலூர், ஜன.30- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்திலிருந்து செந்துறை, அரியலூர், பெரம்  பலூர் வழியாக துறையூர் செல்லும் பேருந்து சுமார் 50 பயணிகளுடன் புறப்பட்டது.  பேருந்து செந்துறை அடுத்த ராயம் புரம் அருகே வந்தபோது, சாலை விரி வாக்கத்துக்காக சாலையோரத்தில் தோண்  டப்பட்டுள்ள பள்ளத்தில் எதிர்பாராத வித மாக, கவிழ்ந்தது.  விபத்தில் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த  செந்துறை பெருமாள் கோயில் தெருவைச்  சேர்ந்த கார்த்திகேயன் (20) சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  மேலும், பேருந்தில் பயணம் செய்த 38 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனை வரும் அரியலூர் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து  செந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

;