அரியலூர், ஏப்.9 - சிதம்பரம் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவனை ஆதரித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை இரவு பிரச்சார பொதுக் கூட்டம் நடை பெற்றது. இதில் கே.பாலகிருஷ் ணன் பேசியதாவது: இந்தியா எப்படி ஒரு பெரிய நாடாக உள்ளதோ, அவ்வாறே ‘இந்தியா’ கூட்டணியும் பெரி யது. பாஜகவை வீட்டுக்கு அனுப்ப பல்வேறு காரணங் கள் உள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாட்டிற்கு வரும் பாஜக தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை.
இடதுசாரிகளின் முயற்சியால் ஐமுகூ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நூறுநாள் வேலை திட்டத்தை, கடந்த 10 ஆண்டு களாக ஆட்சியில் இருந்த பாஜக 32 நாட்களாகவும், அதற்கான நிதியையும் குறைத்துள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் 32 நாள் வேலையை 3 நாட் களாகக்கூட மாற்ற வாய்ப் புள்ளது.
ஒன்றிய பாஜக அரசு உரிய நிதியை தமிழகத்துக்கு வழங்கவில்லை. பெண் களின் நலனுக்கு மாநில அரசு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கி வருவதை குறை சொல்லும் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி யில் இருந்தபோது தந்திருக்க லாமே? ஒன்றிய அரசுடன் அங்கம் வகித்த எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசிட மிருந்து பணத்தை பெற்று, பெண்களின் வங்கிக் கணக் கில் செலுத்தியிருக்கலாமே? 10 ஆண்டு கால ஆட்சியில் மோடி இதுவரை ஒரு ரூபாய்கூட விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவில்லை.
அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான் ரூ.17 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். அவ ரது ஆட்சியில் டீசல், பெட் ரோல், கேஸ் உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. இதனால் மக்கள் பசி, பட்டினியில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு காரணமான மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப, இந்தியா கூட்டணி சார்பாக சிதம்பரம் தொகுதி யில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிப்பீர்! இவ்வாறு அவர் பேசி னார்.
இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டி னா முன்னிலை வகித்து பேசினார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சங்கர், திமுக நகரச் செயலர் முருகேசன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், சிபிஐ மாவட்டச் செயலர் ராமநாதன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நாடாளு மன்றத் தொகுதி திமுக வேட்பா ளர் கே.என்.அருண்நேரு விற்கு வாக்கு கேட்டு திங்க ளன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
“பலம் வாய்ந்த வெற்றிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்ட ணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட் பாளர் கே.என்.அருண்நேரு விற்கு அதிக அளவிலான வாக்குகளை செலுத்தி அவ ரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
பிரச்சாரத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், திமுக மாவட்ட நிர்வாகி வீ.ஜெகதீசன், திருச்சி புறநகர் மாவட்டச் செய லாளர் எம்.ஜெயசீலன், சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயலா ளர் பி.ரமேஷ், மூத்த தலை வர் என்.செல்லதுரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், ஒன்றியச் செய லாளர்கள் எம்.கருணாநிதி, சி.செல்லமுத்து, கே.எம்.சக்திவேல், செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.