districts

img

மலைவாழ் மக்கள் பகுதியில் மாதர் சங்க கிளை மாநாடு

அரியலூர், மே 5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் கிராமத்தில் மலைவாழ் மக்கள் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கிளை மாநாடு நடைபெற்றது.  இதில், மாவட்டச் செயலாளர் பத்மாவதி, ஒன்றியச் செயலாளர் அம்பிகா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டில் தலை வராக கல்கி, துணைத்தலைவராக ராஜ குமாரி, செயலாளராக செந்தில்குமாரி, துணை செயலாளராக அம்மு, பொருளாள ராக லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.