அரியலூர், ஜூன் 5- சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 1,03,554 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமாவள வன், அதிமுக வேட்பாளராக சந்திரகாசன், பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜான்சி ராணி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிட்ட னர். 76.37 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
சிதம்பரம் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், தத்த னூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டி ருந்தன.
செவ்வாயன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 24 சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 5,05,084 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2 ஆவது இடத்தை பெற்ற அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 4,01,530 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,68,493 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் ஜான்சி ராணி 65,589 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம் 3,203 வாக்குகளும், நாடாளுமன்ற மக்கள் கட்சி வேட்பாளர் தாமோதரன் 1642 வாக்கு களும் பெற்றுள்ளனர். நோட்டாவில் 8761 வாக்குகள் பதிவாகியுள்ளன.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 14 வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், விடுதலை சிறுத்தை கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் ஆகிய இருவர் மட்டுமே டெபாசிட் பெற்றனர்.
வெற்றி பெற்ற விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா விடம் வெற்றிச் சான்றிதழை வழங்கினார். போக்குவரத்துத் துறை அமைச்சரும் அரிய லூர் மாவட்ட திமுக செயலாளருமான சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் கா.சொ.க. கண்ணன், சிந்தனைச் செல்வன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.