தஞ்சாவூர்/மயிலாடுதுறை, ஜூன் 25 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திரு நங்கைகளுக்கு சிறப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை யில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம், மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு உதவிடும் வகையில் இதர நலத்திட்ட உத விகள் வழங்கும் துறைகளுடன் இணைந்து, அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை விடு பட்டவர்களுக்கு வழங்கிட இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 17 திருநங்கை களுக்கான அடையாள அட்டை யும், 10 நபர்களுக்கு ஆதார் அட்டை முகவரி மாற்றமும், 11 நபர்களுக்கு முதல்வரின் மருத்து வக் காப்பீட்டு அட்டையும், 15 நபர்களுக்கு குடும்ப அட்டை NPHH அட்டையாக மாற்றப்பட்டு புதிய அட்டையும், மேலும் பாப நாசம் வட்டத்தைச் சார்ந்த 9 திரு நங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அடுக்கு மாடி வீடு விண்ணப்பம், தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டி, மகளிர் திட்டம் மூலமாக புதிய மகளிர் சுய உதவி குழு அமைக்க விருப்பம், வாக்காளர் அடை யாள அட்டை போன்ற 88 கோ ரிக்கை மனுக்கள் பெ றப்பட்டன. திரு நங்கை களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
மயி லாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலை மையில் நடைபெற்றது. 3 திருநங்கைகளுக்கு விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையும், 3 திருநங்கைகளுக்கு ஓட்டுநர் உரிமத்தையும், 4 திருநங்கை களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை திருத்தத்திற்கான விண்ணப்ப படிவத்தையும், மேலும் புதிதாக வாக்கா ளர்களாக சேர்க்கப்பட்ட 2 திரு நங்கைகளுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார்.