districts

img

குடிநீர் பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும்

புதுக்கோட்டை,  ஜூன் 25 - புதுக்கோட்டை மாநக ராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர்  பிரச்சனையைத் தீர்ப்பதற்கு  நகராட்சி நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாதர் சங்கத்தின் மாநகரத் தலைவர் எம்.விஜி, செயலாளர் ஆர்.முத்துமாரி, பொருளாளர் வி.வடிவுக் கரசி, துணைச் செயலாளர் ஆ.ருக்குமணி ஆகியோர் புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணனிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், “புதுக்கோட்டை மநக ராட்சிக்கு உட்பட்ட மாப்பிள்ளையார்குளம், அண்ணாநகர், நேரு வீதி, மச்சுவாடி, நரி மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இத னால், சாதாரண மக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கு நிரந்தர ஏற் பாடு செய்யும் வரை இடைக்காலமாக லாரி களில் தண்ணீர் விநியோகம் நடைபெறு வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும்  நேரு வீதி, அண்ணாநகர் பகுதிகளில் பழுத டைந்துள்ள சாலைகளை செப்பனிடுவ தோடு, தெரு விளக்குகளும் அமைத்துத் தர வேண்டும். மாப்பிள்ளையார்குளம் பகுதி யில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு தோரண  வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணை யர் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள தாக சங்கத்தின் செயலாளர் முத்துமாரி தெரி வித்தார்.