districts

img

சுமைப்பணி தொழிலாளர்கள் கருப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ,14 திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 100 ஆண்டுகளுக் கும் மேலாக, பல தலை முறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2,000 பேர் பணியாற்றி வரு கின்றனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி உயர்வு, போனஸ், பணி பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை போ ராடியும், தொழிலாளர் துறை மூலமாகவும் பெற்ற வந்த நிலையில், வேஸ்ட் பேப்பர் கடை முதலாளிகள், மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ள லாம் என தொழிற்சங்கத்திற்கு தெரியாமல் ரகசியமாக உத்தரவு பெற்றுள்ளனர். அந்த உத்தரவில் 20 ஆண்டு காலம் அங்கு வேலை செய் யும் 42 தொழிலாளர்களை வெளியேற்றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும் இல்லை.  இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை சட்ட விரோதமாக இந்த தொழி லாளி, முதலாளி பிரச்சனை யில் உள்ளே நுழைந்து பீகார் மாநில தொழிலாளர்க ளை குறைந்த கூலிக்கு அமர்த்தியுள்ள முதலாளிக ளுக்கும், பீகார் தொழிலாளர்க ளுக்கும், நூற்றுக்கணக்கான காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு கொடுத்து வரு கின்றனர்.   இந்தச் செயலை கண்டித் தும், இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு   பல ஆண்டுகாலமாக வேலை செய்த தொழிலாளர்க ளுக்கு மீண்டும் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப் பணி தொழிலாளர் சங்க கூட்ட மைப்பு சார்பில், வியாழன் அன்று காந்தி மார்க்கெட் தர்பார் மேடு பகுதியில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ சுமைப்பணி தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். சி.பி.எம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா கருப்புக்கொடியை ஏற்றி கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் பாலக்கரை பகுதிச் செயலாளர் ராமர், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், எல்எல்எப் சங்க மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள், சுமைப்பணி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.