புதுக்கோட்டை, ஜூன் 25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பெ.கலியபெருமாள் படத்திறப்பு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த பள்ளத்தான்மனையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் துரை.அரி பாஸ்கர் தலைமை வகித்தார். படத்தை திறந்து வைத்து கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் உ.வாசுகி புக ழஞ்சலி உரை நிகழ்த்தினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட் டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப் பினர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், மாவட் டக்குழு உறுப்பினர் எல்.வடிவேல் உள்ளிட் டோர் புகழஞ்சலி உரையாற்றினர். முன்னதாக ஒன்றியக் குழு உறுப்பினர் சு.முருகராஜ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், துரை.நாராயணன், கி.ஜெயபாலன், டி. சலோமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. சுசிலா, ஆ.குமாரவேல் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.