மன்னார்குடி, பிப்.24- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சாலிடாரிட்டி இளை ஞர் அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயணம் பிப்ரவரி 19 முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன் னார்குடியில் பெரியார் சிலை மற்றும் பந்தலடி யில் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. பெரியார் சிலை அருகில் நடைபெற்ற கூட்டத் திற்கு ஜபருல்லா தலைமை வகித்தார். திக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். முஹம்மது சுலை மான் வரவேற்றார். திக வழக்கறிஞர் சு.சிங்கார வேல், சிபிஎம் ரகுபதி உள்ளிட்டோர் பேசினர். சாலிடாரிட்டி செயற்குழு உறுப்பினர் மெளலவி. பி.முஹம்மது நாஸர் புகாரி சமூக ஒற்றுமைக்கான தேவைகள் குறித்து சிறப்பு ரையாற்றினார். சர்புதீன் நன்றி கூறினார்.