districts

img

மலைவாழ் மக்கள் சங்க கிளை துவக்க விழா

திருவள்ளூர், ஆக.20- திருவள்ளுர் மாவட்டம், பூண்டி  ஒன்றியம், குன்னவலம் ஊராட்சிக் குட்பட்ட குப்பத்து பாளையத்தில் சனிக்கிழமை (ஆக 20) அன்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கிளை துவக்கப்பட்டது.  சங்க கொடியை மாவட்டப்  பொருளாளர் எஸ். குமரவேல் ஏற்றி  வைத்தார். தகவல் பலகையை மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்  அரசு திறந்து வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் சின்னராசு, அற்புதம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.ஆனந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிர்வாகிகள்
தலைவராக எஸ்.சரவணன், செயலாளராக எம்.முத்து, பொரு ளாளராக கே.சிவா ஆகியோர் புதிய  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட னர்.