திருவள்ளுர், செப்.20- ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் 1990 - ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த 20 - க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர் . இவர்கள் படித்து வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்தும் மேல்தளம் சேதமடைந்தும், கட்டிடம் விரிசல் ஏற்பட்டும் உள்ளது. கடந்த 3 வருடமாக மாணவ - மாணவிகள் ஊருக்கு வெளியே உள்ள இ - சேவை மையத்தில் படித்து வருகிறார்கள்.உடனே இப்பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.