தஞ்சாவூர், ஜூலை 14 - தஞ்சாவூரில் புத்தகத் திருவிழா வெள்ளிக் கிழமை தொடங்குகிறது. மாலையில் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடைபெறும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் மேலும் கூறுகை யில், தஞ்சை அரண்மனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) புத்தகத் திருவிழா தொடங்கி, ஜூலை 25 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தென் னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனை யாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை 4 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படும். மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்ப டும். 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகத் திரு விழாவிற்காக, 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங் கள் இடம் பெறுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு வந்து செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும்” என தெரிவித்தார். முன்னதாக புத்தகத் திருவிழாவிற்கான அழைப்பிதழை ஆட்சியர் வெளியிட்டார்.