districts

img

டிஎன்சிஎஸ்சி வசம் உள்ள ரேசன் கடைகளை கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது! நுகர்பொருள் வாணிப கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், செப்.19 -  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மண்டல அலுவலகத்தின் வாயில் முன்பு மாநில மாநாட்டு தீர்மானங்களை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பி.தமிழரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, மண்டல செயலாளர் கே.பி.கார்த்திகேயன், மாநிலச் செயலாளர் என்.ராசப்பன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். டிஎன்சிஎஸ்சி வசம் உள்ள ரேசன் கடைகளை கூட்டுறவு துறையிடம் ஒப்படைக்க கூடாது. புதிய மண்டலங்களில் அயல்துறை அதிகாரிகளின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.  நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரிசி ஆலை முகவர்களை அனுமதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். சுமை பணியில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.