districts

img

கள்ளக்குறிச்சியில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக.28 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு ஆலோசனைக் குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கி பேசுகையில், நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கவும், பிரச்சனைகளை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ள வழிகாட்டுவதற்காகவும் இந்த குழு செயல்படுகிறது. கூடுதல் விபரங்கள் அறிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விழுப்புரம் 04146-228000, கள்ளக்குறிச்சி வட்ட சட்டப்பணிகள் குழு 04151-226730, உளுந்தூர்பேட்டை சட்டப்பணிகள் குழு 04149-220433, திருக்கோவிலூர் வட்ட சட்டப்பணிகள் குழு 04153-253970 மற்றும் சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு 04151-235033 ஆகிய தொலை பேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.