districts

img

கற்றல் கல்வித் திட்டம் துவக்க விழா

நாமக்கல், அக். 5- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பாக ட்ரீம் டா மொழி கற்றல் கல்வித் திட்டம் வெள்ளியன்று கேஎஸ்ஆர் அரங்கில் தலைவர் சீனிவாசன் துவக்கி வைத்து நடை பெற்றது. தலைமை திட்ட அதிகாரி முனைவர் எஸ்.பாலுசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் பத்மநாபன், திறன் மேம் பாட்டு இயக்குனர் முனைவர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ட்ரீம் டாவின் சின்னம் வெளியிடப்பட்டது. மேலும் ட்ரீம்டா ஆய்வகம் துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கிஸ்ப்ளோ நிறுவனர் மற்றும் தலைமை நிர் வாக அதிகாரி முனைவர் சுரேஷ் சம்மந்தம் பங்கேற்று தகவல் தொடர்புகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதன் மூலம் முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும் என சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் ட்ரீம் தான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காவியா ராஜ் உள்ளிட்ட கல்வியாளர்கள், மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.