சேலம், மார்ச் 29- இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குசேகரிக் கும் வகையில், தருமபுரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக் கப்பட்டது. இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதி யில் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலை யில், தருமபுரியில் வெள்ளியன்று மாலை நடைபெறும் பிரச் சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திமுகவி னர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பை பெற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகி யோர், கார் மூலம் தருமபுரி சென்றடைந்தனர். இதனைத்தொ டர்ந்து சனியன்று (இன்று) மாலை சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற உள்ள பிரம் மாண்ட பொதுக்கூட்டத்தில் மு.க,ஸ்டாலின் பங்கேற்க உள் ளார். அதற்கான ஏற்பாடுகளை திமுக கிழக்கு மாவட்ட செயலா ளர் எஸ். ஆர். சிவலிங்கம் செய்து வருகிறார். முன்னதாக, சேலம் வந்த முதல்வரை வரவேற்கும் நிகழ்ச்சியில், சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாந கராட்சி மேயர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசு, ஓமலூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ், சேலம் மத்திய மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், தொமுச மாவட்டச் செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.