உலகின் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு அடையாளங்கள் உண்டு. அதுபோல் சென்னைக்கு மிக பழைமை யான சைனா பஜார், மூர் மார்க்கெட், மெரினா கடற்கரை போன்றவை அடை யாளங்களாக உள்ளன. பல நூற் றாண்டு பழமை வாய்ந்த சைனா பஜாரின் அடையாளங்களை மெல்ல மெல்ல அழித்து வருகின்றனர். இந்தியாவில் பெரும் நகரங்கள், மக்கள் கூடும் இடங்களில் தெருவோர வியாபாரம் நடைபெறுகின்றன. சமூக காரணங்களால் சாலையோர வியாபா ரமானது சுயதொழில் வாய்ப்பாகவும், சேவையாகவும் அமைந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், ரெடிமேட் துணி கள், அத்தியாவசிய பொருட்கள் போன்றவை சாலையோர கடைகளில் மக்களுக்கு மலிவாக கிடைக்கிறது. இந்தியாவில் சுமார் 8 கோடி தெருவோர வியாபாரிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க சட்டம் இயற்றினால் மட்டும் போதாது. அதை முறையாக அமல் படுத்தவும் அரசுகள் முயற்சிக்க வேண்டும். சென்னை சாலையோர வியாபாரிகள், சங்கம் அமைத்து கடந்த 25 ஆண்டு காலமாக போராடி வரு வதை சென்னை வியாபாரிகள் கூட்ட மைப்பு பெருமை கொள்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் 16.9.1997ல் சென்னை சாலையோர வியாபாரிகள், வியாபாரம் செய்து பிழைத்திட பெருந்திட்டத்தை (மாஸ்டர் பிளான்) உருவாக்க மாநகராட்சிக்கு உத்திரவிட்டது. இதனை மாநக ராட்சி செயல்படாததால், உச்சநீதி மன்றத்தில் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது. அதன்பேரில், 7.12.1998ல் சென்னையிலுள்ள நடைபாதை வியா பாரிகளுக்கு திட்டம் உருவாக்கிட நீதியரசர் ஜெ.கனகராஜ் தலைமையில் ஹாக்கிங் ஜோன் கமிட்டி அமைக்க உத்தரவிட்டது.
இதை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு 6.4.2006 (டபிள்யு.பி.எண்.1049/2006) தீர்ப்பு வழங்கியது. ஹாக்கிங் ஜோன் இம்பிளி மெண்டேஷன் கமிட்டி அமைத்து அதன் தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ராமமூர்த்தி பொறுப்பேற்றார். இந்தக் கமிட்டி, சென்னை நகர சாலையோர வியாபாரிகளை கணக் கெடுத்து வணிக புகைப்பட அடை யாளம் வழங்கியது. 4000 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்து, அதற்கான வாடகை வசூலித்து சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக செயல்பட தொடங்கியது. இதற்கு நமது கூட்டமைப்பு நடத்திய சட்ட போராட்டமும், வியாபாரிகளின் ஒற்றுமையும், இம்பிளிமெண்டேஷன் கமிட்டிக்கு நாம் கொடுத்த ஒத்து ழைப்புமே நமது உரிமையை நிலை நாட்ட முடிந்தது. ஒன்றிய அரசு சாலையோர வியா பாரிகளுக்காக தேசிய கொள்கையை 2009ல் நாடாளுமன்றத்தில் சட்ட மாக்கியது. இச்சட்டம் 9.9.2013ல் இந்தியா முழுவதும் அமலாக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதனால் சாலையோர வியாபாரிகள் வாழ் வாதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத் துதல் சட்டமும், அரசு ஆணையமும் வந்தது. சாலையோர வியாபாரிகளுக் கான ஒன்றிய அரசின் சட்டம் (சட்ட எண்.7/2014) தமிழ்நாடு அரசின் சட்ட விதிகள் (ஜீ.ஓ.எம்.எஸ். எண் 159, நாள் 2.11.2015) படி, சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட 200 வட்டங்களிலும் சாலையோர வியாபாரிகளுக்கு வணிக புகைப்பட அடையாள அட்டை கொடுக் கப்பட்டு, நகர விற்பனைக் குழு (வென்டிங் கமிட்டி) அமைக்கப்பட்டுள் ளது. சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பிரிவு களின் படி நகர விற்பனைக் குழு கூடுவதில், செயல்படுவதில் தொய்வு இருந்தது. மண்டலம் 10ல் விற்பனைக் குழு முறையாக தேர்ந்தெடுக்கப்பட வில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த விற்பனைக் குழுவை கலைத்தது. சட்டத்தில் உள்ளதுபோல் விற்பனைக் குழு அமைத்து செயல் படவும் உத்தரவிட்டது. இதனை அரசு அமலாக்க வேண்டும். நகர விற்பனைக் குழுத் தலைவர் சாலையோர வியாபாரி களின் கோரிக்கையை நேரடியாக தீர்த்து வைக்க வேண்டும். 1. சாலையோர வியாபாரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரலாற்று சிறப்பிடங்கள், பாரம்பரிய இடங்களில் கோட்ட வாரியாக வெண்டிங் ஜோன் (விற்பனை பகுதிகளை) ஒதுக்க வேண்டும். 2. மாநகராட்சி தெரு வியாபாரி களை பதிவு செய்ய வேண்டும். வணிக புகைப்பட அடையாள அட்டை உள்ள வியாபாரிகளை கோட்டம் வாரியாக ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும்.
இந்த பட்டியலை புகைப் படத்துடன் இணையதளத்தில் வெளி யிட வேண்டும். 3. உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, நகர விற்பனைக் குழு பரிந்துரைக்கும் வியா பாரிகளுக்கு, வியாபாரம் செய்ய அனு மதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்து லைசென்ஸ் தர வேண்டும். 4. மாநகராட்சி தெருவோர வியாபா ரிகளை சட்டப்படி பயோமெட்ரிக் கணக்கெடுப்பு நடத்தி பதிவு செய்யப் பட்டதில், விடுபட்ட வியாபாரிகளுக்கு வணிக அடையாள அட்டை வழங்க வேண்டும். 5. தற்போது நடைபாதை வியா பாரம் நடைபெறும் இடங்களை, வியா பாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதி களாக அறிவிக்க வேண்டும். சட்டப்படி அனைத்து சாலையோர வியாபாரி களுக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எந்தவொரு சாலையோர வியாபாரியையும் மாற்று இடம் வழங் காமல் அகற்றக்கூடாது. 6. நடைபாதை வியாபாரிகளின் பிரச்சனைகளை தீர்வு காண சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல் நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு (செக்ஷன் 20, கிரிவன்ஸ்சஸ் ரீடெரிசல் டிஸ்பியூட் ரெசலியூசன் கமிட்டி) அமைக்க வேண்டும் 7. அரசின் சட்ட திட்ட விதிகளின் படி நகர விற்பனைக் குழுக்கள் முறை யாக இயங்கிட அலுவலரை (நோடல் ஆபிசர்) அரசு நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளையும், சட்ட திட்ட விதிகளையும் முறையாக அமல் படுத்தி நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசும், சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வியா பாரிகள் போராடி பெற்ற சட்டத்தை முறையாக அமல்படுத்தவும், வியாபாரி களுக்கு உரிமையும், அதிகாரமும் கிடைக்கவும் சென்னை மாநகர் சிறு வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து போராடும்.