districts

கடலூரில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

கடலூர், ஜூன் 23- கடலூரில் காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணை தொடர்பு கொண்டு அளித்த தகவலின் பேரில் நடை பெறவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், லேடிஸ் பர்ஸ்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி,  பெண்கள் தங்களுக்கான குறைகளைத் தெரிவிக்க 82200 06082 என்ற தொடர்பு எண்ணையும் வெளியிட்டுள்ளார். அதன்படி,  இந்த எண்ணை 20ஆம் தேதி தொடர்பு கொண்டவர் திட்டக்குடி வட்டத்தில்18 வயது நிறைவடையாத சிறுமிக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமலஹாசன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமிக்கு திருமணம் நடத்த இருந்தது  தெரிய வந்தது. இதனையடுத்து, 18 வயதுக்கு குறைவான வருக்கு திருமணம் செய்யக் கூடாதெனக் கூறி  பெற்றோ ருக்கு அறிவுரை வழங்கினர். மீறி திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.