districts

குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்போம் நவ. 20 அன்று 1 மணி நேரம் செல்போன்களை அணைத்துவைப்போம்

சென்னை, நவ. 16- குடும்ப உறவுகளை மேம்படுத்த நவம்பர் 20ஆம் தேதி குழந்தைகளுடன் ஒரு நேரம் செலவழிப்போம் என பெற்றோர் வட்டம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய  பெற்றோர்கள் வட்டத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் நளினா ராம லக்ஷ்மி கூறுகையில், நேர்மறை யான உறவுகள் மற்றும் நெருங்கிய வர்களுடன் இருப்பதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கிறார்கள். உறவு களை உருவாக்குவதற்கு மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்ற வற்றின் குறுக்கீடுகள் இல்லாமல், நம் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதும் அவர்களுடன் விளையாட்டில் ஈடுபடுவதும், அர்த்த முள்ள தகவல்களை பரிமாற்றம் செய்வதும்தான் அவசியம். ஆரோக்கியமான டிஜிட்டல் நடை முறைகள் மற்றும் கேட்nஜட் இல்லாத இணைப்பு நேரம் ஒவ்வொரு குடும்பத்தின் வழக்கமான பகுதியாக மாறவேண்டும். நவம்பர் 20 ஆம் தேதி (உலக குழந்தைகள் தினம்) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை இப்படிப்பட்ட சமூக முன் முயற்சியில் பங்கேற்பதன் மூலம் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணையு மாறு பெற்றோர்கள் வட்டம் கேட்டுக்கொள்கிறது. இந்த ஒரு மணி நேரத்தில், குடும்பங்கள் தங்கள் கேட்nஜட்களை டிஸ்கனெக்ட் செய்து, விளையாடுவது, பேசுவது, சாப்பிடுவது மற்றும் ஒன்றாகச் சிரிப்பது, மகிழ்ச்சியை வேடிக்கையான வழியில் மீண்டும் கண்டுபிடிப்பது என தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடவேண்டும் என்று விரும்புகிறது.

 உங்கள் குழந்தைகளுடன் நம்பக மான உறவை வளர்ப்பதே வெற்றிகர மான குழந்தை வளர்ப்புக்கு முக்கிய மானது. இது நடக்க, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்பது, அவர்களு டன் அரட்டை அடிப்பது அல்லது விளை யாடுவது மற்றும் வேடிக்கை பார்ப்பது, இனிமையான நினைவுகளை உருவாக்குவது என இந்த சிறப்புத் தருணங்களில் செல்போன் உட்பட பிற கவனச்சிதறல்கள் இல்லா மல் குழந்தைகளுடன் இணை வதில் கவனம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமில்லாமல், இதை ஒரு வழக்கமான நடைமுறையில் கொண்டு வர ஊக்குவிப்போம் என்றார்.  தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமி டெட் தலைமை செயல் அதிகாரி ஏ.வி. தர்மகிருஷ்ணன் கூறுகையில், மொபைல்கள், ஐபேட்கள், ஐபாட்கள், விளையாட்டு மென்பொருள் கள் போன்றவற்றின் பரவலான பயன் பாட்டின் காரணமாக குழந்தைகளின் கவனம், படிப்பு மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளிலிருந்து திசை திரும்பியுள்ளது. பிள்ளைகள், பெற்றோரின் அறிவுரைகளைச் சில நேரங்களில் சரிவர கடைப்பிடிக்காமல் போகும்போது குடும்பச் சூழல் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, குடும்ப உறவுகள் உடைந்து போகின்றன. குறிப்பாக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் பெற்றோரும், குழந்தைகளும் டிவி போன்றவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு தினசரி ஒரு மணி நேரமாவது ஒன்றாக நேரம் செலவிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.