திருவள்ளுவர், ஜூன் 26- திருத்தணி கல்வி மாவட்டம் மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2021-22ஆம் கல்வி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு விலை யில்லா பாட புத்தகங்கள், கல்வி தொலை காட்சி நிகழ்ச்சி நிரல் அட்டவணை மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பில் 5 கிலோ அரிசி ஆகியவை வழங்கப்பட்டன. கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்ட்டு கல்வி நிறுவ னங்கள் மூடப்பட்டன. இந்தாண்டும் இது வரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வில்லை. ஆனால் மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் ஆசிரியர், பெற்றோர், மாணவர் முக்கோண உறவை புதுப்பிக்கும் வகையிலும், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் அவசியத்தை வலியுறுத்தியும் தலைமை ஆசிரியர் அ.அரவிந்த் தலைமை யில் பள்ளி ஆசிரியர்கள் மணவூர், மணவூர் காலனி, குப்பம் கண்டிகை, குப்பம் கண்டிகை காலனி ஆகிய கிராமங்களில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் 140 மாணவர்களுக்கு அரசின் இலவச புத்த கங்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்க ளிப்போடு அரிசி வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் பி.ஏ.ஆறுமுகம், மணவூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம், தலைவர் அல்லி அம்மாள் துரைராஜ், துணைத் தலைவர் ரேணுகாதேவி நந்தகுமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோபு ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் ராஜபத்மாபுரம், கண்டிகை, செஞ்சிமதுரா கண்டிகை, லட்சுமி விலாச புரம், பாகசாலை, பொன்னாங்குளம், மருத வள்ளிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 102 மாணவர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்று புத்தகம், அட்டவணை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். இதில் திருத்தணி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்புராயன் கலந்து கொண்டார்.