சென்னை,ஜன.29- சென்னை மாநகராட்சி பகுதிகளில் 24 ஆண்டு களுக்கு பிறகும், சென்னை மாநகராட்சியுடன் இணைக் கப்பட்ட உள்ளாட்சி பகுதி களில் 14 ஆண்டுகளுக்கு பிறகும் சொத்து வரி பொது சீராய்வு செய்யப் பட்டுள்ளது.இந்த நிலை யில் 2022-23ம் நிதியாண்டில் சென்னையில் 7 லட்சத்துக் கும் அதிகமானோர் சொத்து வரி செலுத்தி உள்ள னர். அதே நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் சொத்து வரி செலுத் தாமல் உள்ளனர். இந்த நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.