districts

img

சென்னையில் தண்ணீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னை, அக்.15- வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்களன்று இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. செவ்வா யன்று காலை அது கனமழையாக மாறியது. தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என அனைத்து பகுதிகளிலும் அதி காலை முதல் பலத்த மழை பெய்தது. 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டி ருந்ததால் இருள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையும் கொட்டியது. இந்த மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையாக பெய்தது. விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்த மழை சுமார் 1½ மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை மீண்டும் பெய்தது. மெட்ரோ ரெயில்கள் பணிகள் நடைபெற்று வரும் இடங்களிலும் மழைநீர் வடிகால் வழியாக தண்ணீர் செல்ல முடியாத இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. கோயம்பேடு மெட்ரோ பாலத்துக்கு கீழே பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டிய பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அங்கி ருந்து பாரிமுனை நோக்கி செல்லும் வழியிலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.   அயனாவரம் நூர் ஓட்டல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிக்னல் வரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அயனாவரம் இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனை அருகே தண்ணீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. புரசைவாக்கம் ரித்தடன் ரோட்டில் வழக்கம் போல தண்ணீர் தேங்கி நின்றது. ஒவ்வொரு மழைக்கும் இந்த சாலையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகும். புரசைவாக்கம் பழைய மோட்சம் தியேட்டர் அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் தண்ணீரில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றன.

அழகப்பா சாலையில் தாஷப்பிர காஷ் பேருந்து நிறுத்தம் அருகே சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. அண்ணா நகர் அண்ணா ஆர்ச் அருகே அரசு சித்த மருத்துவமனை நுழைவு வாயிலில் தேங்கி இருந்த மழை நீரை கடந்து செல்வதற்கு நோயாளி கள் சிரமப்பட்டனர். கிண்டி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளும் மழை நீரால் சூழ்ந்திருந்தன. தி.நகர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதி களிலும் தேங்கிய மழை நீரால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரியமேடு, வேப்பேரி, கீழ்ப்பாக்கம் ஆம்ஸ்ரோடு, மயி லாப்பூர், கோட்டூர்புரம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, திருவல்லிக் கேணி, ஐஸ்அவுஸ் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீரில் சிக்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது. ராயபுரம், ஆட்டுத்தொட்டி, பழைய வண்ணாரப்பேட்டை, தண்டை யார் பேட்டை, ஸ்டான்லி நகர், வண்ணாரப்பேட்டை போஜராஜன் தெரு, கேணியம்மன் நகர், திரு வொற்றியூர், மணலி, மாதவரம், வட பெரும்பாக்கம் போன்ற இடங்களிலும் சாலையில் தேங்கிய மழை நீரில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக சென்றதை காண முடிந்தது.  தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தாழ்வான இடங்கள் பலவற்றில் ஒரு அடிஅளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது. காலையில் இருந்தே பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரின் பல பகுதிகள்  சிலமணிநேரம் வெள்ளக்காடாகவே காட்சி அளித்தன. இதனால் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சூழ்ந்தது.

இருப்பினும் சாலைகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள்  மோட்டார் மூலமாக வெளியேற்றிக் கொண்டே இருந்தனர். ஆனால் மழை பெய்து கொண்டே இருந்ததால் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மயிலாப்பூர், ராயப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகள், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொடுங்கையூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் அண்ணாநகர், முகப்பேர், திரு மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் குடி யிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வில்லிவாக்கம், அம்பத்தூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. ஓட்டேரி, அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை, பச்சைக்கல் வீராசாமி தெரு, ஐ.சி.எப்., சென்னை பாட்டை சாலை, வில்லி வாக்கம், சிட்கோநகர், நாதமுனி, திரு மங்கலம் சாலை, சி.டி.எச். சாலையில், சென்னை கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறமும் சுமார் 2 அடிக்கு மேல் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதேபோன்று அம்பத்தூர் பட்டரைவாக்கம் சாலை, டிடிபி சாலை, கள்ளிக்குப்பம், மாத னாங்குப்பம், டீச்சர்ஸ் காலனி, மாதாங்குப்பம் மெயின் ரோடு, புதூர், பானு நகர், ஞானமூர்த்தி நகர், பட்ட ரைவாக்கம் பால் பண்ணை சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றி உள்ள தொழிற்சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக வெள்ளநீர் புகுந்து உள்ளது. தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன

வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு பின்புறத்தில் இருந்து தரமணி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் செல்லும் 100 அடி சாலையில் இருபுறமும் மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மழை நீர் கால்வாய் வழியாக தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதேபோன்று மேடவாக்கம் பிரதான சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ஓ.எம்.ஆர். சாலையில் சிறுசேரி வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. வேளச்சேரி நேருநகர், காம ராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீா் சூழ்ந்துள்ளது. செவ்வாயன்று அதிகாலையில் வீசிய சூறைக்காற்றில் சென்னை மாநகரில் 3 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தி.நகர் பர்கிட் சாலையில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து தீய ணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு, நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெரு ஆகிய இடங்களிலும் மரங்கள் சாய்ந்தன. இந்த மரங்களையும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக இந்த 3 சாலை களிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் அகற்றப்பட்ட பின்னர் சாலையில் போக்குவரத்து சீரானது. சேத்துப்பட்டு, பெரம்பூர், சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் வெளி யேற்றப்பட்டிருந்தது. பெரம்பூர், சேத்துப்பட்டு சுரங்கப்பாதைகளிலும் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று தாம்பரம், ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பெய்த மழையால் தாழ்வான பகுதி களில் வசித்த மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.