சிதம்பரம், ஜூலை 27- சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு வசித்த 11 இருளர் இன குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை அதே ஊரில் இருக்கும் சில ஆதிக்க சமூகத்தினர் அவர்களை அங்கிருந்து விரட்டி யடித்து விட்டு, அந்த இடத்தை ஆக்கிர மித்துக் கொண்டனர். அன்றாடம் குடும்பம் நடத்தவே அவதிப்படும் இருளர் இன மக்கள் வீட்டுமனைகள் இல்லாமல் அதே ஊரில் சில இடங்க ளில் நாடோடிகள் போல் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அந்த இடத்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டும் அது நடைபெறவில்லை. இந்நிலையில் அவர்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அணுகி அவர்களுக்கு வழங்கிய வீட்டு மனையை மீட்டுதர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை யடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் அப்போது இருந்த சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் அதே கோரிக்கையை வலி யுறுத்தி போராட்டமும் நடத்தினர். மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சிதம்பரம் சார் ஆட்சி யர் மதுபாலனை கட்சியின் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, பாதிக்கப் பட்டவர்கள் சந்தித்து ஆக்கிர மித்துள்ள வீட்டுமனையை மீட்டுத் தரவேண்டும் என்று மனு அளித்த னர். அதனைத்தொடர்ந்து சம்பவத் தின் உண்மை தன்மையை அறிந்து சிதம்பரம் சார் ஆட்சியர் துரித நட வடிக்கை எடுத்து கடந்த 20 ஆண்டு களாக இருளர் சமூக மக்களின் வீட்டுமனைகளை ஆக்கிரமித்த வர்களிடம் இருந்து மீட்டு, அந்த வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுத்து, சம்பந்தபட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கி னார்.
பட்டாவை பெற்று கொண்ட அவர்கள் சார் ஆட்சியர், வட்டாட்சி யருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். இதில் புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வக்குமார், கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் பாபு, கிராமநிர்வாக அலுவலர் பார்த்த சாரதி ஆகியோர் கலந்துகொண்ட னர். கடந்த 3 மாதத்திற்கு முன் சாதி சான்றிதழ் இல்லாததால் பிள்ளை களை பள்ளியில் சேர்ப்பதில் சிரமம் உள்ளதாகவும் கல்வி கற்க முடியா மல் பல குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதாகவும் சார் ஆட்சியர் மது பாலனிடம் மனு அளித்தனர். உடனடி யாக அவர் நடவடிக்கை எடுத்து 100க்கும் மேற்பட்டவர்களுகு சாதிச் சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.