சென்னை, ஜன. 6 - 46 ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வெள்ளியன்று (ஜன.6) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1000 அரங்குகளுடன் கூடிய புத்தகக் காட்சி தினசரி காலை 11 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை நடைபெறும். வழக்கம்போல் இந்தாண்டும் புதிய புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
சர்வதேச புத்தககாட்சி
தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16 முதல் 18 வரையிலான மூன்று நாட்கள் இதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி நடை பெறுகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளார்கள். இப்புத்தகக் காட்சியையும் தமிழ்நாடு முதல மைச்சர் தொடங்கி வைக்கிறார். புத்தகக்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. இந்த புத்தகக்காட்சியில் நாடகவியலாளர் பிரளயன், எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் ஆகி யோருக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார். முத்தமிழறிஞர் கலை ஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதினை தேவிபாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதைகள்), தேவதேவன்(கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பேரா.பா.ரா.சுப்பிர மணியன் (உரைநடை/ஆய்வு) ஆகி யோர் பெற்றனர்.
பபாசி விருது பெறுவோர்:
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது - முனைவர் மோ. பாட்டழகன், சிறந்த நூலகருக்கான விருது - முனைவர் க. இரத்தினசபாபதி, சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது - தீபக் மதியழகன் (லியோ புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ்), சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது - தேவி நாச்சியப்பன், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - முனைவர் ச. திருஞானசம்பந்தம், சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்ச வேணி பெரியண்ணன் விருது - எழுத்தாளர் இந்துமதி, சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது - ஆயிஷா இரா. நடராஜன், முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது - பாடலாசிரியர் விவேக், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது - எழுத்தாளர் மெர்வின் ஆகி யோருக்கு வழங்கப்பட்டது. துவக்கவிழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி,தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.