districts

img

இந்தியக் கட்டிடக் கலை குறித்த நூல் அமைச்சர் பி. கே. சேகர்பாபு வெளியிட்டார்

சென்னை, ஏப்.12- இந்தியாவின் பிரபல ஸ்தபதிகளில் ஒரு வராகிய முனைவர் க. தட்சிணாமூர்த்தி எழுதிய ‘தி இன்ட்ரோஸ் பெக்சன் இன் இந்தியன் ஆர்க்கிடெக்சர்’  (THE INTROSPECTION IN INDIAN ARCHITECTURE) என்னும் ஆங்கில நூலை, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு  சென்னையில் வெளி யிட்டார். அறநிலையத் துறை  ஆணையர் ஜெ. குமரகுரு பரன், இந்திய கட்டிடக்கலை கலைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவர்  த. லோகநாதன் ஆகியோர் இதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திப்பேசினர்.  க. தட்சிணாமூர்த்தி தனது  ஏற்புரையில் “இந்நூலில் கட்டிடக் கலையின் அளவு கோல் முறைகள், கட்டிடக் கலையும் மொழியும், கட்டிடக் கலையின் கோட் பாடுகள் ஆகிய தலைப்புக ளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன என்றார்.  நாம்  காணும் கோயிற் கட்டிடங்கள் பல நூறு  ஆண்டுகள் நிலைத்து நிற்பதற்கும்,  அதன் அழகிய வடிவுக்கும் காரணம்,  அதன் உள்ளார்ந்த கணித  நுட்பமும், மிகவும் நுட்பமான  அறிவியல் கோட்பாடுகளும் தான் என்பதை இப்புத்தகம்  விளக்குகிறது. ஆயிரமா யிரம் ஆண்டுகளாய் நம் முன்னோர்கள் மேற் கொண்ட ஆழ்ந்த உழைப் பும், ஆய்வுகளுமே நம்  கலைகளை  விண்ணை முட்டி நிற்க வைத்திருக்கின்றன என்பதற்கு பல உதாரணங் கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மொழியும், கட்டிடமும் ஓன்று. கட்டிடம் என்பது ஒரு உயிர்ப் பொருள்” என்றும் அவர் கூறினார்.