கழிவுநீர் அகற்று வாரிய தொழிலாளர் சங்கம் கோரிக்கை
சென்னை, மே 26– கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டு மென்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெரு நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர கற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ், பொதுச் செயலா ளர் எம்.பழனி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், தூய்மை பணி களையும் மேற்கொள்ளவும் நேரடி நிய மனம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் இரு வகைகளில் பணியமர்த்தப்படுகின்ற னர். இவர்கள் சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு, அவர வர் பொறுப்புக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறி வித்து உள்ளார். மருத்துவ பணியாளர்க ளோடு இணைந்து, முன்கள பணியாளர் களாக பணிபுரிந்து வரும் கழிவு நீர்கற்று தல் பணியாளர்களையும், தமிழக அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். கொரோனா தொற்று எதிர்ப்பு போராட்டத்தில் ஓராண்டுக்கும் மேலாக, கழிவு நீர்கற்று பணியாளர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களில் பலர் இறந்துள்ளனர்; பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். இதையெல்லாம் கவனத்தில் வைத்து, கழிவுநீரகற்றும் தொழிலாளர்க ளையும், இப்பணியில் நேரடி கள தொடர்புள்ள அனைவரையும் முன்கள பணியாளர்களாக அறிவித்து, ஊக்கத் தொகையும், இறந்தால், நஷ்ட ஈடாக 25 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு அறி விக்கப்பட்டுள்ள 2 லட்ச ரூபாய் காப்பீடு ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அறி விக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப் படும் தொழிலாளர்களுக்கு உதவிட குழு ஒன்றும், சிறப்பு அதிகாரியும் நியமிக்க வேண்டும். இந்த இக்கட்டான நிலையிலும் தூய்மைப்பணி செய்யும் தொழிலாளர்க ளுக்கு போதிய நோய்த் தடுப்பு சாத னங்கள் வழங்கப்படுவதில்லை. எனவே, இவர்களுக்கும் காப்பீடு செய்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் பத்து ஆண்டு களுக்கு மேல் பணியாற்றி, பெரு தொற்று காலத்திலும் தொடர்ந்து பணி யாற்றும் கழிவு நீர்கற்றல் தொழிலாளர்க ளின் பணியினை அங்கீகரிக்கும் வகை யில் பேரிடர் காலம் முடிந்தயுடன் ஆய்ந்து பணி நிரந்தரம் வழங்க முதல மைச்சரும், தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.